×

வாடிப்பட்டி அருகே காட்டு மாடு முட்டி தொழிலாளி பலி

வாடிப்பட்டி, ஏப். 2: வாடிப்பட்டி அருகே காட்டு மாடு முட்டி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாடிப்பட்டி அருகே வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசம்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜா (35). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 26ந் தேதி தனது டூவீலரில் பாலமேட்டில் இருந்து வாடிப்பட்டிக்கு அதிகாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லையூர் அருகே வந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக அந்த பகுதி மலையில் இருந்து இறங்கி வந்த காட்டு மாடு முத்துராஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாடிப்பட்டி அருகே காட்டு மாடு முட்டி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Vadipatti ,Muthuraja ,Arashampatti ,Valayapatti ,
× RELATED கருந்தலைப் பூச்சி தாக்கம் குறித்து...